ஏக்கம்...! (நித்யஸ்ரீ)
வருவாயா நீ வருவாயா?
வானில் தேயும் நிலவாய் அல்ல - என்
விழிகளில் இருக்கும் கருவாய்..
மண்ணில் விழும் விதையாய் அல்ல - என்
மனதில் எழும் எண்ணங்களாய்..
கனவில் வரும் கானல் நீராய் அல்ல - என்
நினைவில் என்றும் ஜீவ நதியாய்..
தீண்டிச் செல்லும் தென்றலாய் அல்ல - நான்
சுவாசிக்கும் மூச்சுக் காற்றாய்..
சுட்டெரிக்கும் சூரியனாய் அல்ல – என்
தாகங்களை எரிக்கும் நெருப்பாய்..
வருவாயா நீ வருவாயா ?
என் சேலைச் சோலைக்குள்
உன்னை ஒளித்துக் கொள்வேன்..
என் உள்ளங்கையில் ரேகையாய்
உன்னைப் பூட்டிக் கொள்வேன்..
என் கொலுசுகளின் சலங்கையாய்
உன்னை மாட்டிக் கொள்வேன்
நீ வருவாய் வருவாய் என
காத்திருந்த காலங்கள்
கரைந்தோடியதடா...!பார்த்திருந்த நாட்கள்
விரைந்தோடியதடா...!
காத்திருந்தே கற்சிலையானேன் நான் இன்று
பொய்யாகவே போன உன் வருகை நடப்பதென்று??
----------------------------------------------------------------------
அன்புடன்
நித்யஸ்ரீ
-------------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..
-------------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..
No comments:
Post a Comment