Breaking News
recent

காத்திருப்பு (நித்யஸ்ரீ)




காற்றை நான் தூது விட்டேன்
என் கண்ணாளனே
பதிலும் நீ சொல்வாயோ ?

தென்றல் என்னைத் தீண்டி
உன் சேதி சொல்லவே
நான் காத்திருந்தேன்
அந்தி சாயும் மாலைப் பொழுதில்


என்னில் விழும் மழைச் சாரலை
நான் தூது விட்டேன்
என் கண்ணாளனே
பதிலும் நீ சொல்வாயோ ?

வான் நோக்கியே நான் காத்திருந்தேன்
நீ மழைச் சாரலாய் வந்து
பதில் சொல்வாய் என்று

என் தோட்ட மலர்களின்
வாசம் கொண்டு தூது விட்டேன்
என் கண்ணாளனே
பதிலும் நீ சொல்வாயோ ?

மலரைத் தேடி வரும் வண்டிற்காக
காத்திருக்கும் மலரை போல்
நான் மாலை நேரத்து மல்லிகையாய் மாறி
காலையில் கருகியே போனேன்
கண்ணாளா உன் வருகை பொய்யாய் போனதால்

பாற்கடலை நான் தூது விட்டேன்
என் கண்ணாளனே
பதிலும் நீ சொல்வாயோ ?

கரைத் தொட்டு விடும் பாற்கடலாய்
நானும் உன் எண்ணம் தொட்டு விடவே
காத்திருந்தேன் என் கண்ணாளா .....

நீயும் வருவாயோ ?

உன் வரவிற்காக கன்னி நான்
காத்திருக்கும் நேரம்
இவள் உயிர் பிரியும்
வரை மட்டும் அல்லாது
என்னுயிர் பிரிந்தாலும்
உன்மேல் கொண்டுள்ள காதல்
என்றும் அழியாது .......
------------------------------------------------------------------------
காதலுடன்
நித்யஸ்ரீ...

-------------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

பதிலும் நீ சொல்வாயோ ? nice

Powered by Blogger.