Breaking News
recent

ஏன் எங்காத்து சாம்பார் ருசியா இருக்காதா.??!!!


நாம் அன்றாடம் பார்க்கும் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் தரமில்லாமலோ அல்லது ஆபசத்தை தூண்டுவதாகவோ அல்லது மக்களை மடையர்களாக ஆக்கி ஏமாற்றுவதாகவோதான் இருக்கிறது இதற்கிடையில் ஒரு சில விளம்பரங்கள், சம்பந்தப்பட்ட தயாரிப்பை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சொந்தமானதாக காட்டி (சம்பாதித்துக்) கொள்கிறது, மக்கள் மனதில் வெறுப்பையும் சம்பாதிக்கிறது (அப்படி காட்டி பெரும் வெறுப்பை சந்தித்த விளம்பரத்தில் ஒன்று "ஹீரோ ஸ்பிலன்டர் ஐயர்" என்பது எல்லோருக்கும் நினைவிருக்கலாம். )

அப்படி தற்போது தொலைக்காட்சியில் வந்து கொண்டிருக்கிற விளம்பரங்களில் ஒன்று "ஆச்சி நம்பாத்து சாம்பார்"
ஆமா நான் தெரியாமதான் கேட்கிறேன் எங்காத்து சாம்பார் நன்னா இருக்காதா ஓய் ?!!
அப்புறம் ஆச்சி ஒங்காத்து சாம்பார் மாதிரிதான் இருக்கு அப்படின்னா அதை ஒங்காத்துல மட்டும்தான் நீங்க வாங்கி சமைச்சிக்கனும்.. நாங்க எப்படிண்ணா வாங்குவோம் ?!
அதெல்லாம் இருக்கட்டும் பிரியாணி பொடி, சிக்கன் மசாலா, மட்டன் மசாலா ல்லாம் யார் ஆத்து மசாலா மாதிரி இருக்குன்னு விளம்பரம் பண்றீங்க.??!!
இந்த விஷயத்தை விளம்பரம் எடுத்த கிரியேடிவ் டீம் யோசிக்காம விட்டுட்டாங்களா? இல்லன்னா இது நிறுவனத்தோட எதிர்பார்ப்பா என தெரியவில்லை..
எது எப்படியோ ஆச்சி உங்காத்து சாம்பார் அப்படின்னா அது வேற ஆத்து சாம்பார் இல்லை அதை வேற ஆத்துல உள்ளவங்க வாங்க வேண்டாம் என்றுதான் அர்த்தம்
"மசலாவில்கூட பிரிவினை எங்களுக்கு தேவையில்லை, பிரிவினையான மசாலாவும் எங்களுக்கு தேவையில்லை...
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
குறிப்பு: ஏற்கனவே இதை எழுதுவதாய் யோசித்திருந்த எனக்கு வலைப்பதிவின் மூலம் எழுத தூண்டிய ஐயா வே.மணிமாறன் அவர்களுக்கு நன்றி ...
என்னை தூண்டிய ஐயாவின் பதிவை கீழே கொடுத்திருக்கிறேன்..
-------------
""ஆச்சி மசாலாவின் நம்ம ‘ஆத்து’ சாம்பார் பொடி, ‘பிராமின்ஸ் ஒன்லி’ என்று அர்த்தப்படும்படி அவர்கள் விளம்பரமே சொல்கிறது. (ஆச்சி’ ன்னு பேரு வைச்சா எந்த ‘மாமி’ வாங்கு வாங்க?)
‘பிராமின்ஸ்’க்கும் மட்டும் சாம்பார் பொடி போடுகிற உங்களின் மற்ற மசாலாவும் எங்களுக்கு வேண்டாம். சிக்கன், மட்டன் மசாலாவையும் அவுங்க ‘ஆத்து’ லேயே வித்துக்க. ஆச்சியின் ‘ஜாதி மசாலா’ - தேவையா நமக்கு?
--வே.மதிமாறன்---

No comments:

Powered by Blogger.