காயங்கள் ஆறாதோ...
காலம் செய்த காயம்
மனமெங்கும் பரவி கிடக்க - அதை
கொத்தும் கழுகாய் சில நினைவுகள்
ஏனோ என்ற கேள்வி
ஆயிரங்கள் மனதில் இருக்க - எனை
தேற்றும் பதிலாய் பல கேள்விகள்
வாழ்கை தந்த சோகம்
கானகமாய் பயத்தில் தள்ளிட - இனி
தோற்கும் உரமாய் மன கருவிகள்
மோகம் செய்த சோகம்
நினைவெங்கும் மிரட்டி நின்றிட - ஒரு
நொடியில் தள்ளாடும் ரண பொழுதுகள்
நோகும் நேரம் போகும்
மனமெங்கும் வரட்சி செய்திடும் - பல
பிழைகள் சென்றோடும் சுக தருணங்கள்
வருமா பார்க்கிறேன் வரவேண்டி கேட்கிறேன்
------------------------------------------------------------------
உங்கள் அன்பு இசையன்பன்..
அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..
No comments:
Post a Comment