Breaking News
recent

மூன்றாம் விதி..




என் காதருகே உன் மூச்சுக்காற்றினை
நீ இரைத்துக் கொண்டிருந்த நேரம்
உன் இடையில் பதிந்த என் கைரேகையை
நான் தேடிக் கொண்டிருந்தேன்.



என் கை பிடித்து வயல்களின் வரப்போரம்
நீ நடந்து கொண்டிருந்த நேரம்
காற்றில் பறந்து உன் முகத்தை
வருடும் கூந்தலை நான் ரசித்துக் கொண்டிருந்தேன்


தூறிய மழைக்கு குடையாய் உன் தாவணியை
நீ என் தலையில் போர்த்தி மறைக்கும் நேரம்
பாசத்தில் படபடக்கும் உன் கருவிழிகளை
நான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்


ஆசையாக என்னிடம் நீ பேசிக் கொண்டிருந்த நேரம்
மோகமாய் அசையும் உன் ஈர இதழ்களை
சொக்கி சொருகும் என் கண்களால்
சத்தமில்லாமல் வருடிக் கொண்டிருந்தேன்


நீ என்னருகே நிற்கும் போதெல்லாம்
உலகையே மறந்து பறந்து கொண்டிருந்த நான்
நீ என்னை உதறிய போது மட்டும்
எப்படி அமைதியாய் இருந்தேன் உன்னிடம்..

---------------------------------------------------------
உங்கள் அன்பு இசையன்பன்............

No comments:

Powered by Blogger.