வாராயோ காதல் சொல்ல..
நீலம் கொண்ட வானிலே - என்
காதலி வருவாளோ
வானம் கொண்ட நீலமாய் - அவள்
காதலைச் சொல்வாளோ.
வருவாள் என நான் தவமாக
தருவாள் என தான் தவிப்பாக
இருந்தேன் இருப்பேன் சிறை போல் கழித்து
இருக்கும் உயிரை மெழுகாய் கரைத்து
மனம் நினைவு கொண்டு வலி கொடுக்கும்
மாறும் திறனே இன்றி ஊண் கெடுக்கும்
சிறை இருக்கும் நெஞ்சம் கரை உடைக்கும்
சீறிப் பாய்ந்து கண்ணில் நீர் நிறைக்கும்
நிதம் கனவில் கண்கள் துயில் கலையும்
நீங்கா நினைவில் நித்தம் ஒளி தொலைக்கும்
திறம் படைத்த உள்ளம் உறம் இழக்கும்
தீரா தடை வளர்த்து செயல் திணறும்
வருவாய் என உன் நினைவாக
வாழ்க்கை முழுதும் உறவாக
இருந்தேன் இருப்பேன் சிறை போல் கழித்து
இருக்கும் உயிரை மெழுகாய் கரைத்து
------------------------------------------------
---உங்கள் அன்பு இசையன்பன்.----
No comments:
Post a Comment