நீ எங்கே
காற்றாய் மூச்சாய் துடிப்பாய் என் இதயத்தில் நீ
காற்றும் மூச்சும் துடிப்பும் இருந்தும் உனக்குள் எங்கே நான்
மனம் திறந்து மடை திறந்தேனே கவியாய்
மறப்பாய் என நினைக்க மறந்தேனே தவறாய்
கொத்து கொத்தாய் காதல் சொன்ன காலம் எங்கே
குலைவு கொண்ட காதல் கொண்டு நானும் இங்கே
காதல் காலம் கானல் நீராய் ஆனதோ
காலன் வென்ற காதல் என்றே ஆகுமோ
மறைந்தாலும் உனை நினைக்க நான் மறவேன்
மறுத்தாலும் உன் நினைவில் நான் கரைவேன்
--------------உங்கள் இசையன்பன்----------------------
4 comments:
அழகு அழகு அழகு
வேறென்ன சொல்ல????? துயரத்தையும் அழகிய வரிகளால் கவிதையா கொடுத்துருக்கீங்க
ஆமினா said...
அழகு அழகு அழகு
வேறென்ன சொல்ல????? துயரத்தையும் அழகிய வரிகளால் கவிதையா கொடுத்துருக்கீங்க/////
தங்களின் கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரி..
மறைந்தாலும் உன்னை நினைக்க நான் மறவேன்....
மறுத்தாலும் உன் நினைவில் நான் கரைவேன் ...
அருமை காஜா,,,,,,,,
nithubaby said...
மறைந்தாலும் உன்னை நினைக்க நான் மறவேன்....
மறுத்தாலும் உன் நினைவில் நான் கரைவேன் ...
அருமை காஜா,,,,,,,,///
மிக்க நன்றி தோழி தங்களின் பொன்னான கருத்தோட்டத்திற்கு
Post a Comment