Breaking News
recent

முக்காடில் முழு நிலவு..


முக்காடில் பாதி தெரிந்த உன் முகம்
முகில்களில் பாதி மறைந்த நிலவாய் தெரிந்தது

கண்களால் கவிதை சொன்னாய் 
காதலாய் ஓவியம் தீட்டினேன் நான் 


உன்னையும் என்னையும் சுற்றி நின்ற 
ஓராயிரம் மனிதர்களும் காற்றினில் கரைந்திருந்தனர்

உனக்கும் எனக்கும் இடைவெளிகள் இருந்தும்
நமக்கு மட்டுமே தெரியும் நாம் இருவரும் கலந்திருந்தது

விழியின் வழியில் கலந்திட்ட நாம்
வாழ்க்கை முழுவதும் கலந்திருப்போமா..



--------------------------------------------------------------------------------
(டிஸ்கி : ஒரு பையன் ஒரு பெண்ணை (ஒரு திருமண வீட்டில்) பார்த்து (சரி ரெண்டு பேரும் சைட் அடிச்சு)., அவளுக்கு அவன் எழுதி அன்று மாலையே அவள் கையில் கொடுத்ததுதான் மேலே உள்ள கவிதை...))

ஒன்று இரண்டு வார்த்தைகள் அழகுக்காக மாற்றப்பட்டுள்ளது..

-----------------------------------------------------------------------------------
கல்யாண வீட்டில் மொய் எழுதாம சாப்பிட்ட இசையன்பன் :) :) :)

No comments:

Powered by Blogger.