Breaking News
recent

தஞ்சை வாசன்





















தஞ்சை தரணி செய்த வாஞ்சை தமிழே
நெஞ்சம் நிறைய செய்யும் கவிதரு நிழலே

கவியில் வாசம் செய்யும் காதல் தாசா
காதல் கவி பேசும் தஞ்சை வாசா

எண்ணிலடங்கா கவி சமைக்கும் ஒருவனே
எண்னங்களில் காதல் நிறைக்கும் கவிஞனே

பேசும் மொழி கவியாகும் அனைத்துமே
போற்றும் வழி காதலாகி அணைக்குமே

கலையினருக்கு உன் காதல் கவிதான் சுருதியே
வலையினருக்கு உன் கவியனைத்தும் குருதியே

சகோதரிகளின் உள்ளம்தனில் செல்லம் கொண்டாய்
சகோதரர்களின் உள்ளம்தன்னை கொள்ளை கொண்டாய்

வலைத்துறை கவியதில் முடிசூடி பெயர் கண்டாய்
திரைத்துறை காவியத்தில் கவிபாடி முடி கொள்வாய்

உன்னுடைய பிறந்தநாளில் இன்று வாழ்த்தும் பேறு பெற்றேனே
உன்னுடைய நண்பர்களில் என்றும் நானும் ஓருவராய் நிற்பேனே..

----------------வாசனின் நண்பன் இசையன்பன்----------------

டிஸ்கி: இது எனது இனிய நண்பர் தஞ்சை வாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்தாக முகநூலில் எழுதியது
 அன்பு நண்பர்களே!.. படித்துவிட்டு தங்களுடைய பொன்னான கருத்துக்களை சொல்லிட்டுப் போங்க.., அப்படியே ஓட்டும் போட்டுட்டு போங்க...

5 comments:

SURYAJEEVA said...

உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

isaianban said...

suryajeeva said...
உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்////

மிக்க நன்றி நண்பரே மிக்க மகிழ்ச்சி:-)

nithubaby said...
This comment has been removed by the author.
nithubaby said...

வானளாவிய உங்கள் நட்பு என்றும் தொடர என் வாழ்த்துக்கள்..... உங்களை விட இன்னும் சிறப்பாக அவரை வாழ்த்திட யாராலும் முடியாது ......

isaianban said...

nithubaby said...
வானளாவிய உங்கள் நட்பு என்றும் தொடர என் வாழ்த்துக்கள்..... உங்களை விட இன்னும் சிறப்பாக அவரை வாழ்த்திட யாராலும் முடியாது ....../////

மிக்க நன்றி தோழி நித்யஸ்ரீ
என்றும் எங்கள் நட்பு தொடரும் நம்முடன்.... :-)

Powered by Blogger.