காதலோடு....
மடியில் தலை சாய்ந்து
முகம் பார்த்து இமை சாய்த்து
நொடியில் எனை சேர்த்து
இதழ் கோர்த்து அமுதூட்டு
பனி பாற்கடலே தளிர் பூச்சரமே
மனதை திருடும் மலர் மான் விழியே
காதலோடு நடக்கும் போரிது
காமன் நெஞ்சம் என்னில் சேர்ந்தது – உன்
பார்வை எனை வீழ்த்துது
காயம்பட்ட மனது வாடுது
காதல் வந்து வார்த்தை போக்குது – உன்
வாசம் எனை மீட்டுது
புலர் நேரத்திலே இருள் தொய்ந்திடுமே
மனம் காதலிலே பொருள் தேடிடுமே...
-----------------------------------------------------
----------உங்கள் இசையன்பன்------------
http://www.kannniyam.blogspot.com/அன்பு நண்பர்களே!.. படித்துவிட்டு தங்களுடைய பொன்னான கருத்துக்களை சொல்லிட்டுப் போங்க.., அப்படியே ஓட்டும் போட்டுட்டு போங்க...
No comments:
Post a Comment