Breaking News
recent

இதயக் கதவுகள். " 1 "




“தடக் தடக்” என கேட்கும்
தூரத்து தொடர்வண்டியின் ஓசையையும்,
அடுக்களையில் அம்மாவின் உபயத்தில்
பாத்திரங்கள் எழுப்பும் “டிங் டங்” ஓசையையும்,


பக்கத்து தெரு கோவிலில் இருந்து
மெல்லியதாக புறப்பட்ட பக்தி இசையையும்,
வீட்டின் வெளியில் சிறார்கள் விடும்
பம்பர விளையாட்டு கூச்சலையும்,

எனது தலைக்கு மேலே "கிர் கிர்" என்று
செருமிக்கொண்டிருந்த மின் விசிறியின் இருமலையும்
மீறி படுக்கையிலிந்து எழாமல்
கண் மூடிக் கிடக்கிறேன்.

வீசும் மெல்லிய வசந்த காற்றின் கைகளில்
அவளின் விரல்கள் என்னை வருடிக் கொண்டிருக்கிறது,
எனது இதயக் கைகள் அவளை என் நெஞ்சோடு
இறுக்கி அணைத்துக் கொண்டிருக்கிறது,

அவளின் சூடான மூச்சுக் காற்று என் உணர்வுகளைத் தட்டி எழுப்பி
என் குருதியினை மதுவாக மாற்றிக் கொண்டிருக்கிறது,
நாசி உணர்கின்ற அவளின் “காதல் மகரந்த” வாசனை
என்னை பூமியிலிருந்து எங்கோ தூக்கிச் செல்கிறது.

உடல் கனத்து நான் கிடக்க
இதயம் மட்டும் இறக்கை முளைத்து பறந்து கொண்டிருக்கிறது
அவளின் நினைவுடன்.

-----------------------------------------------------
உங்கள் அன்பு இசையன்பன்



4 comments:

nali said...

ithayam mattum irakkai mulaithu paranthukkondirukkirathu very nice anna .

isaianban said...

nali said...
ithayam mattum irakkai mulaithu paranthukkondirukkirathu very nice anna .////

நன்றி நளினி :)

Unknown said...

உடல் கனத்தால் பரவாஇல்லை மனசு கனக்காமலிருகட்டும் :P கவி அழகு :)

isaianban said...

அன்பு தோழி said...
உடல் கனத்தால் பரவாஇல்லை மனசு கனக்காமலிருகட்டும் :P கவி அழகு :)////

காதலால் மனது கனக்காது பறக்கத்தான் செய்யும் :) :) :) நன்றி :)

Powered by Blogger.