மணிக் குயிலே
முகம் தருவாய் மணிக் குயிலே,
முகவரிகள் எனக்கில்லையே..
எனை நீயும் சேர்ந்தால் அது போதுமே,
உயிர் வாழுமே காலமே....
உனை நினைத்து உயிர் கசிந்து,
உடல் உருகி நிதம் மெலிந்தேன்..
கனவுவரும் கண்களிலே,
துயில்மறந்து பரிதவித்தேன்..
தென்றல் தேரிலே போகும் வேளையில்,
தேடி ஓடுதே நெஞ்சம் பாதையில்,
கனவுகளை நினைவுகளாய் கொடுத்து விடு.,
கவிதைகளை நிறைவுகளாய் முடித்துவிடு ..
--------------------------------
உங்கள் அன்பு இசையன்பன்...
அன்பு நண்பர்களே!.. படித்துவிட்டு தங்களுடைய பொன்னான கருத்துக்களை சொல்லிட்டுப் போங்க.., அப்படியே ஓட்டும் போட்டுட்டு போங்க...
2 comments:
NICE!
vetrithirumagal said...
NICE!
மிக்க் நன்றி சகோ. மிக்க மகிழ்ச்சி
Post a Comment