தருவாய் நீ...
புன்னகையில், பூக்கள் பூக்கும்,
பூக்கள் அதை, பார்க்க நாணும்.,
உந்தன் கையில், உலகம் என்றும்,
உயிர் வந்து, உன்னை கெஞ்சும்.,
என் வாழ்க்கை, உன் விழியில் விடியாதோ,
உன் வார்த்தை, என் உயிரில் கரையாதோ.,
நம் காதல், கவி சுமந்து நகராதோ,
தம்மோடு, எனை அமர்த்தி பறக்காதோ.,
நிலா முகம், கண்ணில் தெரிய,
நிழல் வந்து, என்னைப் பிரிய.,
கண்கள் ரெண்டும், தூக்கம் மறக்க,
கண்ட இன்பம், காதல் உரைக்க.,
நீதானே என் அரசின் மகராணி
எப்போதும் என் மனதின் யுவராணி
என்னுடலில் என்றும் நீ சரிபாதி
எனக்காக உன் மனதை தருவாய் நீ....
--------------------------------------------------
உங்கள் அன்பு
-------இசையன்பன்-------
தங்களின் மேலான கருத்துக்களை இட்டுச்செல்லுங்கள் அன்பர்களே!, அப்படியே ஓட்டும் போட்டுடுங்க....
2 comments:
என் வாழ்க்கை உன் விழியில் விடியாதோ
உன் வார்த்தை என் உயிரில் கரையதோ
அற்புதம் கதலின் தன்மை அழகாக சொல்லி உள்ளீர்
Arul Mozhi said...
என் வாழ்க்கை உன் விழியில் விடியாதோ
உன் வார்த்தை என் உயிரில் கரையதோ
அற்புதம் கதலின் தன்மை அழகாக சொல்லி உள்ளீர்/////
நன்றி தோழி அருள் காதலின் தன்மையை உணர்ந்ததை எப்படி மறக்க முடியும்...
Post a Comment